பாம்பன் பகுதியில் காற்றின் வேகத்தால் ரயில் சேவை துவக்க முடியாது-ரயில்வே உயர் அதிகாரிகள்

பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தற்போதைக்கு ரயில் சேவையை துவங்க முடியாது என ரயில்வேத் துறை கூறியுள்ளது.

பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில், கடந்த சில தினங்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேஸ்வரத்துக்கு வந்து சேரும் ரயில்களும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டுச்செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பாம்பன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால், தற்போதைக்கு ரயில்சேவையை துவக்க முடியாது என்று இந்திய ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீரமைப்பு பணிகள் நிறைவடைவது பற்றியோ, ரயில் சேவை எப்போது துவக்கப்படும் என்பது பற்றியோ தற்போதைக்கு திட்டவட்டமாக சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version