19 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கிய ரயில்சேவை

கொல்லம் – எழும்பூர் இடையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை – கொல்லம் இடையில் பாரம்பரியமான கொல்லம் மெயில் கடந்த 1904ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக்கும் பணிக்காக இந்த சேவை கடந்த 2000ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இந்த ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ரயில் சேவையை சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார். இந்நிலையில் செங்கோட்டை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி, ஓட்டுநருக்கு பொன்னாடை போர்த்தி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Exit mobile version