தூத்துக்குடி ரயில் தண்டவாளங்களில் குளம் போல் தேங்கிய மழை நீர்

தூத்துக்குடியில் ரயில்நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர்  தேங்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்ததால், மாநகரத்தில் பெரும்பாலான பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையின் காரணமாக ரயில்நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியது.

இதனால் சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரயில், மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version