ரயில்வே இரண்டாவது முன்பதிவு அட்டவணை – 10-ம்தேதி முதல் மீண்டும் அமல்!

ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு, இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை, வரும் 10ஆம் தேதி முதல், மீண்டும் அமலுக்கு வருகிறது.

கொரோனா காலத்தில் 2வது முன்பதிவு அட்டவணை, ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடைசி நேர முன்பதிவுக்கான கால அளவு குறைந்துள்ளது. எனவே, பயணிகள் வசதிக்காக 2வது அட்டவணை தயாரிப்பதில் பழைய முறையே தொடர வேண்டும் என, ரயில்வே கோட்டங்கள் சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதனைதொடர்ந்து. பழைய முறைப்படி ரயில் புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, 2வது முன்பதிவு அட்டவணை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வருகிற10ஆம் தேதி முதல், மீண்டும் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version