அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நாளை முதல் அடுத்த மாதம் 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாட்டில் அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார்.

அமேதியில் 2004ல் இருந்து தொடர்ந்து மூன்று முறை ராகுல்காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறையும் அவர் போட்டியிடுகிறார். இந்தநிலையில், ராகுல்காந்தி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக பேரணியாக சென்ற அவருடன் பிரியங்கா காந்தியும் உடன் சென்றார். வேட்பு மனு தாக்கலின் போது சோனியா காந்தியும் உடன் இருந்தார்.

Exit mobile version