நக்சல் விவகாரத்தில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் – அமித் ஷா

நக்சல் கொள்கையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ராய்ப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், நக்சல் அமைப்பினர் புரட்சியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், நக்சல் கொள்கையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், வன்முறை, தோட்டாக்கள் மூலம் புரட்சி செய்ய முடியாது என்றும் ஆனால் ஏழை பெண்களுக்கு கால்நடைகளை வழங்குவதன் மூலம் வெண்ணிற புரட்சி செய்யலாம் என்றார்.

Exit mobile version