ராகுல், சோனியா உடனான மாயாவதியின் சந்திப்பு திடீர் ரத்து

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனான சந்திப்பை, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென ரத்து செய்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று தெரிய வந்துள்ளது. இதனால், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் டெல்லியில் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வந்த நிலையில், டெல்லி பயணத்தை மாயாவதி ரத்து செய்துள்ளார். எந்த கட்சி தலைவர்களையும் மாயாவதி சந்திக்கப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.சி. மித்ரா தெரிவித்துள்ளார்.

Exit mobile version