இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல்காந்தி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், சந்திரயான் 2 திட்டத்துக்கு முழுமூச்சாகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்குப் பாராட்டு எனக் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானிகளின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துதலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகாது எனவும், இனிவரும் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு இது அடித்தளமாகும் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version