ராகுல் காந்தியின் கனவு பலிக்காது : சரத்குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் காஞ்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் போது பேசிய சரத்குமார் ராகுல் காந்தியின் கனவு பலிக்காது என்றும் திமுக டெபாசிட்டை இழக்கும் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version