டெல்லி சீன உணவகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள சீன உணவகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

டில்லி பல்கலைக்கழக மாணவர் பிரதிஸ்தா தேவஸ்வர் தலைமையிலான 7 மாணவர்கள் அடங்கிய குழு, ராகுல் காந்தியுடன் கலந்துரையாடியது. டெல்லி லோதி ரோட்டில் உள்ள சீன உணவகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது, பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ராகுல் பேசியதாக மாணவர்கள் கூறினர். திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை களைவது, சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை களைவது குறித்த அம்சங்களை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ராகுல் காந்தி மிக எளிமையாக நடந்துகொண்டதாகவும், தங்களுக்கு உணவு பரிமாறியதாகவும் தங்கள் ஆச்சரியத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

Exit mobile version