''PM CARES'' நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் ”PM CARES” நிதிக்கு, பண உதவி அளித்துள்ளனர். இந்த நிதி மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ”PM CARES”  பெரும் பங்களிப்பை பெற்றுள்ளது என்றும், அந்த நிதி தணிக்கை செய்யப்படுவதை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Exit mobile version