ரஃபேல் விவகாரத்தில் பாஜக-வை குற்றம்சாட்டிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? : அமித்ஷா கேள்வி

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தார்.

பாஜக அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ரஃபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த ராகுல்காந்தி, தற்போது மன்னிப்பு கேட்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்புயுள்ளார்.

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் எந்த ஒரு நிறுவனத்தையும் அரசு பரிந்துரைக்கவில்லை எனவும், இது ஒரு வெளிப்படையான நடவடிக்கை எனவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும் உண்மையைக் கண்டு காங்கிரஸ் கட்சி பயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version