நேர்மையான பிரதமராக இருப்பேன் வாக்குறுதியை மோடி உடைத்துவிட்டார் –  ராகுல் காந்தி விமர்சனம்

நேர்மையான பிரதமராக இருப்பேன் என்ற வாக்குறுதி உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி உடைத்து நொறுக்கிவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஐதராபாத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சராக இருந்த சந்திரசேகர் ராவும் அதிகமான வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

ஆனால் அதில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், விவசாயக் கடன் தள்ளுபடி, நேர்மையான பிரதமராக இருப்பேன் உள்பட அனைத்து வாக்குறுதிகளையும், மோடி உடைத்து நொறுக்கிவிட்டார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version