ரஃபேல் விவகாரம் – காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு மீது உரிமை மீறல் நோட்டீஸ்

ரபேல் வழக்கில் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்துவிட்டதாக காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் விமானங்களின் விலைகள் பொது கணக்கு தணிக்கை குழுவிடம் தெரிவிக்கப்பட்டு, அதனை நாடாளுமன்ற கணக்குக் குழு ஆய்வு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டி இருந்தது.

இதனை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல் அளித்துவிட்டதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

முன்னதாக உச்ச நீதிமன்றம் தகவலை தவறாக புரிந்துகொண்டதாக மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version