ரபேல், மேகேதாட்டு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சிகள் அமளி -மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை அவைகள் கூடியதும், ரபேல், மேகேதாட்டு பிரச்சினைகளை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் இன்றும் ஈடுபட்டன.

மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து அவை நடவடிக்கையை ஒரு மணிநேரத்திற்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் அவை கூடியதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version