மாணவ – மாணவிகளுக்கு வினாடி வினா புத்தகம் வழங்கல்

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா தொடர்பான புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார். கோவை ஆலந்துறை மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வினாடி-வினா தொடர்பான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலுமணி, கடந்த 17 ஆண்டுகளாக இந்த வினாடி வினா புத்தகங்களை வழங்கி வருவதாகவும், தேர்வுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருந்ததாக மாணவர்கள் தன்னிடம் தெரிவிக்கப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது அம்மா ஐஏஎஸ் அகாடமி திறக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், உயர் படிப்புகளில் மாணவர்கள் நன்றாக படித்து முன்வர வேண்டும் என்றும் வாழ்த்தினார். இதனைத்தொடர்ந்து மத்வராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

Exit mobile version