5 மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் ”பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்” பெறுமா..?

அல்லு அர்ஜுன் நடித்து வெளியாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ’ராஷ்மிகா மந்தனா’ நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையக்கருத்தாகவும், அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் நடித்துள்ளார். வில்லனாக போலீஸ் வேடத்தில் பிரபல மலையாள நடிகர் ’பகத் பாசில்’ நடித்துள்ளார்.

மேலும் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் கவர்ச்சியாக ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை. இப்பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

அதன்படி, இந்த பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இப்பாடலை தடை செய்ய வேண்டும் அல்லது இப்பாடல் வரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுள்ளது.அதுமட்டுமல்லாது,ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இதற்கிடையே அல்லு அர்ஜுன் நடித்திருந்த இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு கொடுக்கும் நிறுவனம் பற்றிய விளம்பரம் தெலுங்கனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சில நாட்களுக்கு முன்பு சைபராபாத்தில் உள்ள என்-கன்வென்ஷன் சென்டரில் படத்தின் ’மீட் அண்ட் க்ரீட் ’நிகழ்வுக்கு பிறகு, பலருக்கு காயம் ஏற்பட்டது, இதன் விளைவாக ஒரு போலீஸ் வழக்கு.

இவ்வளவு சிரமத்திலும் ரிலீஸ் ஆன பிறகும் #BoycottPushpainKarnataka என்ற ட்ரெண்டுடன் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை கன்னட ரசிகர்கள் வெளிபடுத்தி வருகின்றனர்.காரணம்,கன்னடப் பதிப்பிற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாகவும், மலையாளம் மற்றும் தமிழ் பதிப்புகள் பெங்களூரில் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது தான்..!

இது கன்னடத்தின் பிரதிபலிப்பைக் குறைக்கும் என பல கன்னட சினிமா புரவலர்களை எரிச்சலடைந்துள்ளனர்.அதோடு அதிகளவில் டிக்கெட்டும் புக் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பாடல் தொடங்கி,வெளியீடு வரை இவ்வளவு இன்னல்களை சந்தித்து 5 மொழிகளில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் ”பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்” பெறுமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version