தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு!

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான கலாச்சார விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைததார். இந்த நிகழச்சியில் உரையாற்றிய அவர், தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும், பாதுகாப்பு இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version