ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவிலிருந்து குணமடைந்தார்!

கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குணமடைந்திருப்பதாக தனியார் மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றால் உடல்நலம் பாதித்து ஆழ்வார் பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் கோவிட் 19 மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் அவரது மன உறுதி விரைவில் குணமடைய உதவியதாகவும்,அவர் தொடர்ந்து சிறந்த உடல்நலத்துடன் சேவையாற்ற வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version