கன்னியாகுமரியில் தூய அலங்கார மாதா தேவாலயத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரியில் புகழ்பெற்ற தூய அலங்கார உபகாரமாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகாரமாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி திருப்பலி, நேர்ச்சை, கொடிகள் பவனி உள்ளிட்டவை நடைபெற்றன. திருக்கொடியை ஆயர் நசரேயன் சூசை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்த கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

 

Exit mobile version