நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உருவபொம்மை எரிப்பு!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக, நடிகை மீரா மிதுனை கண்டித்து, புதுச்சேரியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் நடிகர், நடிகையர் மீது அவதூறு கருத்துக்களை வெளியிடும் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே கலாம் சேவை மையத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகை மீரா மிதுன் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Exit mobile version