பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்கிறார்.

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியிலேயே அதிருப்தி கிளம்பியது. நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்ததால், அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதனால், பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம், சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த சரண்ஜித் சிங் சன்னி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், சரண்ஜித் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவியேற்கிறார்.

Exit mobile version