உடல்நலக் குறைவால் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

உடல்நலக் குறைவால், புலவர் புலமைப்பித்தன் காலமானார். அவருக்கு வயது 85.

புலவரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதி புகழ்பெற்றவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version