”கடலுக்குள் மூழ்கிய மீனவர்” – தேடும் பணி தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில், கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியைச் சேர்ந்த கணேசன், மணிமுத்து ஆகிய இருவரும், திங்களன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகத்தால், படகு கவிழ்ந்ததில், இருவரும் கடலில் தவறி விழுந்துள்ளனர். மணிமுத்து கடலுக்குள் மூழ்கிய நிலையில், தத்தளித்தபடி கிடந்த கணேசனையும், படகினையும் சக மீனவர்கள் மீட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, 2 நாட்டுப் படகுகளில் 6 மீனவர்கள் கொண்ட குழுவினரும், ஒரு விசைப்படகில் மீன்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மீனவர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version