புதுக்கோட்டை ஒன்றரை வயது குழந்தைக்கு மதுவை ஊற்றிய தாய்

புதுக்கோட்டையில் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு மது கொடுத்து தானும் அருந்தி போதையில் தள்ளாடிய பெண்ணை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மதுபானக் கடையில் நடாயி என்ற பெண் மதுபானம் வாங்கி அருந்தி போதையான பிறகு தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கும் மதுபானத்தை டம்ளரில் ஊட்டியுள்ளார்.

இதில் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்ணையும், குழந்தையையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பட்டப்பகலில் பொது இடத்தில் வைத்து தாயே தன் குழந்தைக்கு மதுபானம் ஊட்டியது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version