புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதிநாட்களில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதிநாட்களில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடின.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு போன்றவற்றை மாநில அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்றும் நாளையும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது காய்கறி, பழங்கள், மளிகை கடைகள், பாலகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவம் சார்ந்த தேவைகள், பொது போக்குவரத்து, ஆட்டோக்கள், டாக்ஸிகள் போன்றவை வழக்கம் போல இயங்கி வருகின்றன.

ஊரடங்கின் போது சுற்றுலாத் தலங்கள், மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version