புதுச்சேரி மக்களுக்கு வழங்கவேண்டிய இலவச அரிசியை வழங்கவில்லை என சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை வழங்காததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கியும் மக்களுக்கு இலவச அரிசியை வழங்காததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் நலத்திட்ட நிதியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தவறாக பயன்படுத்துதாக கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இணைந்து மக்களை ஏமாற்றுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

Exit mobile version