புதுச்சேரி சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி சபாநாயகராக காங்கிரஸ் வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து, புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆளுங்கட்சி தரப்பில் துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து உள்ளிட்ட சிலர் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட இருந்தனர். போட்டியிட விரும்புபவர்கள் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உரிய கால அவகாசம் தரப்படவில்லை என கூறி எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பு செய்தன. இதனால் சிவகொழுந்து போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார். நாளை காலை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில், சிவகொழுந்து சபாநாயகராக பதவியேற்று கொள்வார்.

Exit mobile version