புதுச்சேரியில் துணை ராணுவத்தினர் வாகன சோதனை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலைமுன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்த துணை ராணுவத்தினர், சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் வாகன ஓட்டிகள் தகுந்த ஆவணங்களுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் பொருட்களை கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version