புதுச்சேரியில் புத்தாண்டை எராளமானோர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்

புதுச்சேரியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டு களைக்கட்டியது.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் கடற்கரை சாலையில் நள்ளிரவில் ஏராளமானோர் திரண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கொண்டாட்டத்தில் பங்கேற்று ஒருவரைக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். வான வேடிக்கை, அலங்கார தோரணைகள், வண்ண விளக்குகள், என கடற்கரை சாலையே விழாக்கோலம் பூண்டது.

Exit mobile version