புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவிஏற்பு

புதுச்சேரியில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியது. இதை தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த 7 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லட்சுமி நாராயணனுக்கு, வரும் நாளை காலை 9 மணிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Exit mobile version