காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி சீரழிந்துவிட்டது – என்.ரங்கசாமி

கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டு, மாநிலம் சீரழிந்து வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, முத்தியால்பேட்டை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மாநில அரசு மத்திய அரசுடன் எப்போதும் இணக்கமாக இருக்க வேண்டும் எனவும்; அப்போது தான் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியினை பெற முடியும் என்று கூறினார். ஆனால் கடந்த 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டு புதுச்சேரி சீரழிந்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version