புதுச்சேரி அரசின் மோதல் போக்கு மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது: ரங்கசாமி

புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருப்பதால் தான் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேட்டை பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில், கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் ஆளுநருடன் சண்டை, மத்திய அரசுடன் மோதல் போக்குடன் இருப்பதுதான் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக ரங்கசாமி கூறினார்.

Exit mobile version