புதுச்சேரியில் மிகவும் மோசமான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது -என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி

புதுச்சேரி வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, மற்றும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய நிலையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரியில் மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய ரங்கசாமி, நாடாளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார்.

Exit mobile version