News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது – நாராயணசாமி

Web Team by Web Team
December 25, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது – நாராயணசாமி
Share on FacebookShare on Twitter

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தெரிவிக்கையில், “கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர்வளத் ஆணையத்திடம் சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணை கட்ட அனுமதி வழங்கியது என்று தெரிவித்தார்.

இதனால், தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்பதை அறிந்து மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், அணை கட்டுவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

சிங்கபூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் 7 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் பா.ஜ.க. அரசு ஜிஎஸ்டி வரி முறையை அமலுக்கு கொண்டு வந்து தற்போது, 31 பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர். ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வியே ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதற்கு காரணம் என குறிப்பிட்டார்.

மூன்றாவது அணியை உருவாக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.

Tags: சந்திரசேகர ராவ்தெலங்கானா முதலமைச்சர்நாராயணசாமிபுதுச்சேரி முதலமைச்சர்
Previous Post

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணியில் 7 வயது சிறுவன்

Next Post

இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்வு

Related Posts

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: சந்திர சேகர ராவ்
TopNews

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: சந்திர சேகர ராவ்

March 6, 2020
புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி
TopNews

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி

May 28, 2019
டீ குடிப்பதற்காகவா சந்திரசேகர ராவ் சென்னை வந்தார்?: ஜெயக்குமார்
TopNews

டீ குடிப்பதற்காகவா சந்திரசேகர ராவ் சென்னை வந்தார்?: ஜெயக்குமார்

May 15, 2019
சந்திரசேகர ராவுடன் சந்திப்பு: ஸ்டாலின் விளக்கத்தால் பலரும் அதிர்ச்சி
TopNews

சந்திரசேகர ராவுடன் சந்திப்பு: ஸ்டாலின் விளக்கத்தால் பலரும் அதிர்ச்சி

May 14, 2019
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை
TopNews

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை

February 18, 2019
ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா
TopNews

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா

February 16, 2019
Next Post
இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

March 23, 2023
இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

March 23, 2023
இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

இராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..!

March 23, 2023
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு..இந்தியாவிற்கு எத்தனாவது இடம்?

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version