புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டும் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே நீடிக்கும் அதிகார மோதலால், மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கடுமையான நிதிப்பற்றாக்குறையால், அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது. இந்நிலையில், பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என்று கூறி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் பேரணியாக சென்று, சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, ஆட்சி நடத்த திறமை இல்லாத நாராயணசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version