அகில இந்திய அளவில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4-வது இடம்: புதுச்சேரி முதல்வர் பெருமிதம்

அகில இந்திய அளவில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் பிடித்துள்ளதற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலில் புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையத்திற்கு 4ம் இடம் கிடைத்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் புதுச்சேரி காவல் நிலையம் இடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை என பெருமிதம் தெரிவித்தார். இந்த பெருமைகள் அனைத்தும் காவல்துறை அதிகாரிகளை சாரும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version