விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி தர முடியாது – புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்திக்கு, பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க முடியாது என முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க கோரி, முதலமைச்சர் நாராயணசாமியிடம் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் இந்து முன்னணியின் தலைவர் சனில்குமார் ஆகியோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரியில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடைபெறும் என்றார்.

Exit mobile version