புதுச்சேரியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாக்குப்பதிவு

புதுச்சேரியில் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரை தொடர்ந்து புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அம்பகரத்தூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குப்பதிவு செய்தார். ஆட்சியர் விக்ராந்த்ராஜா நேருநகர் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி. ராகுல் அல்வால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மாநிலந்தோறும் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Exit mobile version