புதுச்சேரியில் வழக்கறிஞர், அவரது மனைவி கழுத்தை நெரித்து கொலை

 

புதுச்சேரியில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்குள் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஹேமலதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பாலகிருஷ்ணன் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் தேனி ஜெயகுமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் சொந்த தொகுதி என்பதால், சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் நேரில் சென்று பார்வையிட்டார். விசாரணையை துரிதப்படுத்த போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

Exit mobile version