ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியீடு

ஜம்மு காஷ்மீரில் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுவிட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், அனைத்து பகுதிகளில் இருந்தும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாகவும் சாலைகளில் பல மடங்கு வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகள் நூறு சதவீதம் இயங்குவதாகவும், செல்போன் இணைப்புகள் குப்வாரா, ஹண்ட்வாரா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சீரடைந்து இருப்பதாகவும் ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Exit mobile version