மக்கள் ஊரடங்கிற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- முதல்வர் வேண்டுகோள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியின் 9 அம்சங்களை தமிழக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள், தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் எதுவும் இயங்காது என்பதையும், மெட்ரோ ரயில்கள் இயங்காது என்பதையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி அறிவித்தப்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்ட அனைவருக்கும், பொது மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்து கொரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version