பொங்கல் தொகுப்பு அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூரில் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கு பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற
உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் மற்றும், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு 21 பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பை வழங்கினர்.

இதில் வழங்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசியில் புழுக்கள் நெளிந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கரும்பு என்ற பெயரில் குட்டையான கரும்பை வழங்கியதால் பொதுமக்களிடம் அதிருப்தி நிலவியது.

Exit mobile version