நடிகர் விவேக்கின் நினைவாக பொதுமக்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்து அஞ்சலி

நடிகர் விவேக்கின் நினைவாக பொதுமக்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அடுத்த ஆவடியில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு 200க்கும் மேற்பட்டோர் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ஆவடி பருத்திப்பட்டு பசுமை ஏரி பூங்காவில் நடிகர் விவேக் நட்டு வைத்த மரத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, சிலம்பக்கலை வீரர்கள், பொதுமக்கள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூரில் பல்வேறு தரப்பினரும் மரக்கன்றுகள் நட்டு மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நல இயக்கங்களளை சேர்ந்த இளைஞர்கள், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பும், ரயில்வே மேம்பாலம் அருகிலும் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

ஈரோட்டில் சிறகுகள் அமைப்பின் சார்பில் இயற்கை ஆர்வலர் நடிகர் விவேக்கிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ரயில்வே காலனி பகுதியில் நடிகர் விவேக்கின் நினைவைப் போற்றிடும் வகையில் மரக்கன்றுகளை ஒரு கையிலும், மெழுகுவர்த்திகளை மறு கைகளிலும் ஏந்தியபடி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகே மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இயல், இசை, நாடக கலைஞர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் விவேக் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version