தாய்லாந்தில் பிரதமர் பிரயூத் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பிரயூத் தலைமையிலான ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாங்காக் நகரில் திரண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், சர்வாதிகார போக்கை பிரதமர் கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

 

 

 

Exit mobile version