மின்மோட்டார் பழுதை சரி செய்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

கடலூர் மாவட்டம் ஆண்டிபாளையத்தில் போர்வெல்லில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

ஆண்டிபாளையம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் பிரதான போர்வெல்லின் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பழுதை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்குமாறு ஊராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விரைவாக செயல்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்ததுடன் போர்வெல்லில் இருந்த மண்ணயும் அகற்றினர். குடிநீர் பிரச்னையை உடனடி நடவடிக்கை மூலம் தீர்த்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version