கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தனியாக தோற்றுவிப்பது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் ,மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள்,அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை மனுவாக அளித்தனர். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தார்.

Exit mobile version