ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

சேலையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபாலகிருஷ்ணனை, மர்ம நபர்கள் 3 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.

இதில், இரு கைகள் துண்டாகி, தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயத்துடன் உயிருக்குப் போராடியவரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம், நள்ளிரவு 2 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு வெகு நேரமாகியும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கண்முன்னே உயிருக்குப் போராடும் சூழலிலும் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் கதறுகின்றனர்

Exit mobile version