பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் பேருந்து நன்கொடை

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கையுடன் பள்ளிக்கு பொதுமக்களால் வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் சென்று வருவதற்கு வசதியாக, கிராம மக்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். மேலும் பேருந்து இயக்க விழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளியில் புதிதாக சேர்ந்த 40 மாணவர்களை ஏற்றிகொண்டு ஊர்வலமாக சென்று பள்ளியில் விடப்பட்டனர். இதனையடுத்து புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சில்வர் வாட்டர் பாட்டில்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Exit mobile version