கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு அனுமதி

கடற்கரை மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தளர்வுளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும், இன்று முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக 50 சதவீத பயிற்சியாளருடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version